கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி நகரைச் சேர்ந்தவர்
சோமசுந்தரம். இருசக்கர வாகனத்தில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் வித்யா (22).
ஏழ்மையான நிலையில் பி.எஸ்சி. பட்டப் படிப்பை முடித்துள்ள வித்யா, தமிழக நில அளவைப் பதிவேடுகள் துறை யில் காலியாக இருந்த பதிவறை எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.
பணிக்கான அனைத்து தகுதிகளும் இருந்ததால், இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு வருமாறு, துறை சார்பில் கடந்த 12-ம் தேதி, உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பாணை கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
அதில் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு உதகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்துக்கு கடந்த 14-ம் தேதி வந்துள்ளது.
வித்யா வசிக்கும் சாந்தி நகர், மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்துக்கு அருகிலேயே உள்ளது. இந்த நிலையில், அந்தக் கடிதம் நேற்று (மார்ச் 16) மதியம் 1.40 மணிக்குத்தான் வித்யாவிடம் வழங்கப்பட்டதாம்.
காலை 10.30 மணிக்கு பங்கேற்க வேண்டிய நேர்முக தேர்வு கடிதம் மதியம் 2 மணியளவில் கொடுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்ததாக தலைமை தபால் அலுவலகத்தில் வித்யா முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் தலைமை தபால் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, வித்யா புகார் கொடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
சோமசுந்தரம். இருசக்கர வாகனத்தில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் வித்யா (22).
ஏழ்மையான நிலையில் பி.எஸ்சி. பட்டப் படிப்பை முடித்துள்ள வித்யா, தமிழக நில அளவைப் பதிவேடுகள் துறை யில் காலியாக இருந்த பதிவறை எழுத்தர் பணிக்கு முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.
பணிக்கான அனைத்து தகுதிகளும் இருந்ததால், இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு வருமாறு, துறை சார்பில் கடந்த 12-ம் தேதி, உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பாணை கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
அதில் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு உதகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்துக்கு கடந்த 14-ம் தேதி வந்துள்ளது.
வித்யா வசிக்கும் சாந்தி நகர், மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலகத்துக்கு அருகிலேயே உள்ளது. இந்த நிலையில், அந்தக் கடிதம் நேற்று (மார்ச் 16) மதியம் 1.40 மணிக்குத்தான் வித்யாவிடம் வழங்கப்பட்டதாம்.
காலை 10.30 மணிக்கு பங்கேற்க வேண்டிய நேர்முக தேர்வு கடிதம் மதியம் 2 மணியளவில் கொடுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்ததாக தலைமை தபால் அலுவலகத்தில் வித்யா முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் தலைமை தபால் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, வித்யா புகார் கொடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.