பாராட்டுதல்களை பெறும் SSA மேற்பார்வையாளரின் அசத்தலான பணி.




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார வள மைய வளாகம் முறையான பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக புதர்களும்,
செடிகளுமாய் காட்சியளித்தது..

கழிப்பிட வசதியும்,தண்ணீர் வசதியும் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.. இதெல்லாம் பழைய செய்தி...

ஆனால் மேற்பார்வையாளராக பொறுப்பேற்ற திருமதி.சிவயோகம் அவர்களின் ஆர்வம் மற்றும் பணி ஈடுபாடு காரணமாக இன்று பளிச்சிடுகிறது..
பராமரிப்பிற்கான மொத்த செலவையும் தான் ஒருவரே ஏற்றுக்கொண்டு செய்துள்ளார் என்பது மிகவும் வரவேற்கத்தக்க விசயமாகும்..

தவறு செய்யும் அலுவலர்களை எளிதில் குறைசொல்லி விடுகிறோம்.. நல்லது செய்தால் எவருக்கும் ஏனோ பாராட்ட மனம் வருவதில்லை..
தன் அலுவலகத்தை சுத்தமாகவும்,சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது அதிகாரியின் கடமை என்றாலும்கூட சிறு சிறு அங்கீகாரங்கள் அவர்களை மேலும் செம்மைப்படுத்தும்..
பாராட்டி மகிழ்வோம்..

சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...