கனமழை :பொள்ளாச்சி சுற்றுவட்டார பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை:கனமழை காரணமாக பொள்ளாச்சி ஆனைமலை, வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கோவை,நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இதனையடுத்து கனமழை காரணமாக பொள்ளாச்சி ஆனைமலை, வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
