குற்றப்பின்னணி உள்ள நபர்களை கட்சிகளே நிராகரிக்க வேண்டும்: பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்


புதுடெல்லி: குற்ற பின்னணி கொண்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கிரிமினல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் முழுவதும் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, 2014ம் ஆண்டு முதல் 1581 குற்ற வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீது நிலுவையில் உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...