வாபஸான 'ரெட் அலர்ட்': நாளை என்ன நடக்கும்?என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?


மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பளிக்கும் வகையில் தமிழகத்திற்கு நாளை மழை பொழிவதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 4ஆம் தேதி அனுப்பிய எச்சரிக்கைக் குறிப்பில் அக்டோபர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகத்தில் கன மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

மாநிலத்தின் பல இடங்களில் 25 செ.மீட்டருக்கும் மேலான மழைப்பொழிவு இருக்கும் என்பதால், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இப்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நாளை என்ன நடக்கும் என்பது குறித்து மக்களிடையே அச்சம் நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்று ஃபேஸ்புக்கில் அறியப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜானை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது.

'மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை"

"முதலில் ரெட் அலர்ட் என்பது மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் தமிழகம் முழுவதும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைளை முடிக்கிவிடுவதற்காக தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்த நிர்வாக ரீதியிலான எச்சரிக்கை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ரெட் அலர்ட்டிற்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு கிடையாது" என்று பிரதீப் ஜான் கூறுகிறார்.

சிவப்பு, ஆம்பர், மஞ்சள், பச்சை போன்ற நிறத்தின் அடிப்படையிலான எச்சரிக்கையை விடுப்பது குறித்து பிரதீப் ஜானிடம் கேட்டபோது, "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழையின் தீவிரத்தை பொறுத்து தேசிய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் எச்சரிக்கைகளுக்கு நிறம் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். சமீபத்திய கேரள வெள்ளத்தின்போது கூட, அம்மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது" என்று அவர் கூறினார்.

நாளை என்ன நடக்கும்?

தமிழகத்தை பொறுத்தவரை நாளை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் போன்ற வட மாவட்டங்களைவிட தென் தமிழகத்திலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.


ஒவ்வொரு வருடமும் பொழியும் சாதாரண பருவ மழைதான் இது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வகையிலான மழைப்பொழிவு அடுத்த சில நாட்களுக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்பில்லை.

சமூக வலைத்தளங்களில் பரவும் அதிகாரப்பூர்வமற்ற கற்பனை செய்திகளை மக்கள் நம்பக்கூடாது என்று வெதர்மேன் மேலும் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...