கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும், தென்மேற்கு பருவமழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்றோடு தென்மேற்கு பருவமழை முடிவடையும் நிலையில், வடகிழக்கு பருவமழை உடனே தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே, அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சென்னையில் பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
