ஒருங்கிணைந்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் !

ஒருங்கிணைந்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 16.11.2018, காலை 11 மணி, சென்னை எழும்பூர், வெஸ்டின்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

20 ஒருங்கிணைப்பாளர்கள் கொண்ட ஜாக்டோ-ஜியோ.

நிதிகாப்பாளர் - 2

செய்தி தொடர்பாளர்கள் - 1


6பேர் கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
1. தொடக்கப்பள்ளி-2

2. உயர்நிலை/மேல்நிலை - 2

3. அரசு ஊழியர்கள் - 2

1.19.11.2018 முதல் 20.11.2018 மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டம்.

2. 25.11.2018 மாவட்ட வேலை நிறுத்த ஆயத்தமாநாடு

3. 26.11.2018 முதல் 30.11.2018 தமிழகம் முழுவதும்மாவட்டந்தோறும் பிரச்சாரம்.

4. 30.11.2018 மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.

5. 01.12.2018 பத்திரிகையாளர் சந்திப்பு.

6. 04.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்.

கோரிக்கைகள்

1. பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.

2. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

3. உயர்நிலை த.ஆ, முதுகலை ஆசிரியர்கள் அமைச்சு பணியாளர்கள் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும்.

4.அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

5. 21 மாத ஊதிய நிலுவை வழங்க வேண்டும்.

6. 2003-2004 தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிவரண்முறை செய்ய செய்ய வேண்டும்.

7. அரசாணை எண்.56, 100, 101 முற்றிலும் இரத்து செய்யவேண்டும், 5000 பள்ளிகள் மூடப்படும் என்ற கொள்கையை இரத்து செய்யவேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...