தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் இந்த மாதத்தில் பொது மாறுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான எல்லா ஏற்பாடுகளும், அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் வழக்கமாக நடைபெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு பற்றி எந்தவித தகவல்கள் இல்லாததால் ஆசிரியர்கள் இடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. ஆகவே , இதுகுறித்து கல்வித்துறையைச் சார்ந்த அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளது என்னவென்றால் ,இடைநிலை ஆசிரியர்களுக்கு,இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி ,1 :30 என்ற விகிதாச்சாரத்தின்படி, பணி நிரவலுக்குப் பின்னர் மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் .