சுயநிதிப் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, மெட்ரிகுலேஷன் மற்றும்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான புதிய கட்டணத்தை, நேற்று வெளியிட்டது.
குழுவிடம்
மேல் முறையீடு செய்த பள்ளிகள் மற்றும் சென்னை ஐகோர்ட்டில்
உத்தரவு பெற்ற பள்ளிகளுக்கு, படிப்படியாக, புதிய கட்டணங்கள்
நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.கடந்த வாரம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மட்டும், புதிய கட்டண விவரங்களை வெளியிட்ட கட்டண நிர்ணயக் குழு, நேற்று மெட்ரிகுலேஷன் மற்றும் மீதமிருந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, புதிய கட்டண விவரங்களை வெளியிட்டது. தமிழக அரசின், தீதீதீ.tண.ஞ்ணிதி.டிண இணைய தளத்தில், கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், 200க்கும் அதிகமான பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கட்டணம், நடப்பு கல்வியாண்டிற்கு மட்டுமே பொருந்தும் என, கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது.