தொடர் மதிப்பீடு பயற்சி முகாம்

நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான தொடர் மதிப்பீடு மற்றும் முழுமையான பயிற்சி முகாம் இன்று நடக்கிறது.கூடுதல்
முதன்மை கல்வி அலுவலர் பொன்னையா தலைமை வகிக்கிறார். உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்து வரவேற்கிறார். மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பெரியசாமி, ஆசிரியர்கள் ரத்தினம், குழந்தைசாமி, நடராஜன் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்படுகின்றனர்.முகாமில், பிராத்தனை கூட்டம் மற்றும் யோகா நடத்தும் முறை, முழு உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், பள்ளி சுற்றுச்சூழல் பாதுகாக்கும் முறை, சுகாதாரத்தை பேணி காப்பது பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி முகாமில், ஆசிரியர் பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் செய்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...