டயஸ் படிவம் பூர்த்தி செய்வதற்கு பயிற்சி நாளை காலை "ஞான்தர்ஷன்' மூலம் ஏற்பாடு

"டயஸ்' படிவம் பூர்த்தி செய்வது குறித்து, நாளை காலை தூர்தர்ஷன் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.மத்திய அரசு மற்றும் உலக வங்கியின் நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் உள்ள வசதிகளை மேம்படுத்துதல், ஆசிரியர் நியமித்தல், வகுப்பறை கட்டுதல், புதிய கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் பயன்கள் எந்த அளவுக்கு பள்ளிகளை சென்று சேர்ந்துள்ளது என்பதை கண்டறியும், அதுகுறித்த புள்ளி விபரங்களை தொகுக்கவும், இந்தியா முழுவதும், "டயஸ்' எனும் படிவம் ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்டு, விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.இதில் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை, கழிப்பறை, குடிநீர், காம்பவுண்டு சுவர் வசதி உள்ளிட்ட பள்ளியை குறித்த அனைத்து விபரங்களும் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படிவம் வழங்கப்பட்டாலும், பல பள்ளிகளில் பிழைகளுடன் இப்படிவம் பூர்த்தி செய்வது தொடர்கிறது.இதை தவிர்க்க, நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகவல்களை பெறும் வகையில், மத்திய அரசின் மனிதவளத்துறை மூலம், தூர்தர்ஷன் பிரிவான, "ஞான் தர்ஷன்' "டிவி'யில், செப்டம்பர், 14ம் தேதி, காலை, 10 மணி முதல், பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், 20 பக்கம் வரை உள்ள டயஸ் படிவத்தை பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.இப்பயிற்சியில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ள, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரவளமையத்திலும், இப்பயிற்சியை எல்.சி.டி., பிராஜக்டர் மூலம் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...