வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு புதுப்பிக்க இன்று கடைசி நாள்


வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவை புதுப்பிக்க இன்று (18ம் தேதி) கடைசி நாளாகும். தமிழகத்தில் கடந்த 2008, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில்
பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து கடந்த சில நாட்களாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும், ஆன்-லைன் மூலமும் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனால் போட்டி போட்டு கொண்டு பலர் தங்கள் வேலைவாய்ப்பை பதிவை புதுப்பித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் இந்த பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் இன்று (18ம் தேதி) மாலைக்குள் தங்கள் பதிவை புதுப்பித்து கொள்ளலாம். இதுவரை பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு கடைசி வாய்ப்பாக உரிய ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விட்டால் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க முடியாது என்பதால் கடைசி கட்ட ஏற்பாடுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காதவர்கள் களம் இறங்கியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...