பள்ளியில் வன உயிரின வாரவிழா


உலக இயற்கை நிதியம் சார்பில் வன உயிரின வாரவிழா பள்ளியில் கொண்டாடப்பட்டது.வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் அனந்தராசு உதவி நடுநிலைப்பள்ளியில்,
உலக இயற்கை நிதியம் சார்பில் வன உயிரின வார விழா நடந்தது. இதில், தலைமையாசிரியர் அம்பிகாநிதி தலைமை வகித்தார். ஆசிரியர் சிங்காரவேலு வரவேற்றார். உலக இயற்கை நிதிய முதுநிலை அலுவலர் சரவணன் பேசினார்.வேதாரண்யம், கைலவனம்பேட்டை, பயத்தவரன்காடு, மறைஞாயநல்லூர், ஆதனூர் பகுதியைச் சேர்ந்த, பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வன உயிரினம் குறித்த குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராமசாமி, கவுன்சிலர் முத்துலட்சுமி, தலைமையாசிரியர் சொக்கலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...