பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி மையம் துவக்கம்

திட்டக்குடியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தொலைநிலை கல்வி மையத்தின் வகுப்புகள் துவக்கவிழா மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி நிறுவனர் கோடிப்பிள்ளை தலைமை தாங்கினார். தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார். தொலைநிலைக் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் லெனின் வரவேற்றார்.விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. எம்.பி.ஏ., எம்.காம், எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., மற்றும் இளங்கலை பட்ட படிப்புகளுக்கான வகுப்புகள் துவங்கியது.நிகழ்ச்சியில் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன், ஆடிட்டர் கருணாநிதி, இளங்கோவன், கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...