மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

செங்கம் உருது நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
 இப்பயிற்சி முகாமிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட கருத்தாளர் சி.பி. பழனி தன்னை அறிதல், பிறர் நிலையில்
வைத்து பார்த்தல், படைப்பாற்றல், மன அழுத்தம், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்புத் திறன் குறித்து மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் மூலம் மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...