விளையாட்டில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

தேசிய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டு போட்டிகளில் சாதித்த, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு, 1.05 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசை, மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.
தேசிய, மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் மாணவ, மாணவியருக்கு, ரொக்கப் பரிசு
வழங்கப்பட்டு வருகிறது. 2011 - 12ம் ஆண்டுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகையில் நடந்தது.
தேசிய, மாநில அளவில் சாதித்த, ரேவதி, சத்யா, கரோலினி, சுவேதா, திவ்யா உள்ளிட்ட, 21 மாணவ, மாணவிகளுக்கு, மேயர் சைதை துரைசாமி, 1.05 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். இணை ஆணையர் வெங்கடேஷ் (கல்வி), உதவி கல்வி அலுவலர் ரஞ்சனி உள்ளிட்ட அதிகாரிகள், இதில் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...