மாணவர்களை அதிகம் ஏற்றினால் நடவடிக்கை : கோர்ட் உத்தரவுப்படி அறிவுறுத்தல்

ஆட்டோக்களில் அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும், டிரைவர்கள் உரிமம் மீது, கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பள்ளிக் குழந்தைகளை, ஆட்டோக்களில் அதிக அளவில் ஏற்றிச் செல்வதால், விபத்துக்கள்

ஏற்படுகிறது. இது குறித்து, டிராபிக் ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம்,"" போலீசார், வட்டார போக்குவரத்து துறை இணைந்து, ஆட்டோக்களில் எத்தனை குழந்தைகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து, அனைவருக்கும் தெரியும் விதமாக,விளம்பரபடுத்த வேண்டும்.
இதை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதிகமான மாணவர்கள் செல்லும் ஆட்டோக்களில் தங்களது குழந்தைகளை அனுப்புவதை தவிர்க்கும்படி, பெற்றோர்களை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, போக்குவரத்து கமிஷனர் பிரபாகர்ராவ், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அனைத்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி ,"" அனுமதித்த அளவை விட அதிக மாணவர்களை ஆட்டோக்களில் ஏற்றினால், ஆட்டோ உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...