கல்வித்துறை உதவியாளர் நாளை பணி நியமனம்

பள்ளி கல்வித்துறையில், 563 இளநிலை உதவியாளர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, நடக்கிறது. பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள்,
படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்ற இளநிலை உதவியாளர்கள், 563 பேர், பள்ளி கல்வித்துறையில், பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை காலை, 10:00 மணிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வு பெற்றோர், அவரவர் சொந்த மாவட்டத்தில் உள்ள, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, நாளை காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...