31 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நேற்று வரை, 31 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், 2013 - 14ம் கல்வியாண்டிற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு,
இம்மாதம், 9ம் தேதி, விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் நடந்து வரும் விண்ணப்ப விற்பனை, இன்றுடன் முடிகிறது.
நேற்று மட்டும், 1,074 மற்றும் இதுவரை மொத்தம், 31 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள், விற்பனை ஆகி உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாளை மறுநாள் (20ம் தேதி), மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...