செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, "இஸ்ரோ' சார்பில் அனுப்பப்படும், "மங்கள்யான்' செயற்கைக்கோள், இன்று
மதியம், பி.எஸ்.எல்.வி.,ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
செவ்வாய் கிரகம் குறித்து ஆராய, இந்திய விண்வளி ஆய்வு நிறுவனமான, "இஸ்ரோ', 450 கோடி ரூபாய் செலவில், "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' என்ற, செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதை திட்ட செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த திட்டத்துக்கு, "மங்கள்யான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. "மங்கள்யான்' செயற்கைக்கோள், 1350 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிம வளம், மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து, ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேகமாக, ஐந்து நவீன கருவிகள் "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் எடை, 15 கிலோ. "மங்கள்யான்' செயற்கைக்கோள் சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி.,சி 25 ராக்கெட், இன்று மதியம், 2:38 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. "மங்கள்யான்' செயற்கைக்கோளை ஏவுவதற்கான, "கவுன்ட் டவுன்' நேற்று முன்தினம், காலை, 6:08 மணிக்கு துவங்கியது.
"மங்கள்யான்' பயண விவரம்: பி.எஸ்.எல்.வி.,சி 25 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் "மங்கள்யான்' செயற்கைக்கோள், 44 நிமிடங்களில், 17 ஆயிரம் கி.மீ.,பயணம் செய்து, பூமியின் துருவ பாதையில், நிலை நிறுத்தும். பி.எஸ்.எல்.வி.,சி 25 ராக்கெட் செலுத்தப்பட்ட, 20 நிமிடங்களுக்கு, அதை ரேடார் மூலம் கண்காணிக்க முடியாது. இந்த ராக்கெட்டை கண்காணிக்க, அந்தமான் தலைநகர் போர்ட்பிளேர், புருனே மற்றும் பெய்க் ஆகிய இடங்களில் டெலிமீட்டர் ரிசீவர்களும், தென்பசிபிக் கடலில், பிரத்யேக ரிசீவர்கள் பொருத்தப்பட்ட யமுனா, நலந்தா என்ற இரண்டு கப்பல்களும், நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு வருட பயணம்: புவியின் நீள்வட்ட பாதையில், ஒரு மாதம் பயணம் செய்யும் "மங்கள்யான்' செயற்கைகோள், டிசம்பர், 1ம் தேதி, இரவு, செவ்வாய் கிரகத்திற்கான, தன் முறையான பயணத்தை துவங்குகிறது. 10 மாதங்கள் பயணம் செய்த பின், அடுத்த ஆண்டு, செப்டம்பர், 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும். இன்று "மங்கள்யான்' செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவுப்பட்டால், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணையும் என்பது, குறிப்பிடத்தக்கது.
மதியம், பி.எஸ்.எல்.வி.,ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
செவ்வாய் கிரகம் குறித்து ஆராய, இந்திய விண்வளி ஆய்வு நிறுவனமான, "இஸ்ரோ', 450 கோடி ரூபாய் செலவில், "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' என்ற, செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதை திட்ட செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த திட்டத்துக்கு, "மங்கள்யான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. "மங்கள்யான்' செயற்கைக்கோள், 1350 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிம வளம், மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து, ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேகமாக, ஐந்து நவீன கருவிகள் "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் எடை, 15 கிலோ. "மங்கள்யான்' செயற்கைக்கோள் சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி.,சி 25 ராக்கெட், இன்று மதியம், 2:38 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. "மங்கள்யான்' செயற்கைக்கோளை ஏவுவதற்கான, "கவுன்ட் டவுன்' நேற்று முன்தினம், காலை, 6:08 மணிக்கு துவங்கியது.
"மங்கள்யான்' பயண விவரம்: பி.எஸ்.எல்.வி.,சி 25 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் "மங்கள்யான்' செயற்கைக்கோள், 44 நிமிடங்களில், 17 ஆயிரம் கி.மீ.,பயணம் செய்து, பூமியின் துருவ பாதையில், நிலை நிறுத்தும். பி.எஸ்.எல்.வி.,சி 25 ராக்கெட் செலுத்தப்பட்ட, 20 நிமிடங்களுக்கு, அதை ரேடார் மூலம் கண்காணிக்க முடியாது. இந்த ராக்கெட்டை கண்காணிக்க, அந்தமான் தலைநகர் போர்ட்பிளேர், புருனே மற்றும் பெய்க் ஆகிய இடங்களில் டெலிமீட்டர் ரிசீவர்களும், தென்பசிபிக் கடலில், பிரத்யேக ரிசீவர்கள் பொருத்தப்பட்ட யமுனா, நலந்தா என்ற இரண்டு கப்பல்களும், நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு வருட பயணம்: புவியின் நீள்வட்ட பாதையில், ஒரு மாதம் பயணம் செய்யும் "மங்கள்யான்' செயற்கைகோள், டிசம்பர், 1ம் தேதி, இரவு, செவ்வாய் கிரகத்திற்கான, தன் முறையான பயணத்தை துவங்குகிறது. 10 மாதங்கள் பயணம் செய்த பின், அடுத்த ஆண்டு, செப்டம்பர், 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும். இன்று "மங்கள்யான்' செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவுப்பட்டால், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணையும் என்பது, குறிப்பிடத்தக்கது.
