தனியார் பள்ளிகள், சதுர அடிக்கு, 280 ரூபாய் வீதம், கட்டணம் செலுத்த வேண்டும்' என, நகர அமைப்பு துறையின் உள்ளூர்
திட்ட குழுமமான எல்.பி.ஏ., அதிகாரிகள், நெருக்கடி கொடுத்து வருவதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட கல்வித் துறையிடம் இருந்து, பள்ளிக்கான அங்கீகாரத்தைப் பெறுகின்றனர். பின், கட்டட தரச் சான்றிதழ், தீயணைப்புத் துறையினர் சான்று, உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களையும் பெறுகின்றனர். அத்துடன், உள்ளாட்சி அமைப்புகளிடம், முறையாக வரியும் கட்டுகின்றனர். இந்நிலையில், நகர அமைப்பு துறையின் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் (லோக்கல் பிளானிங் அத்தாரிட்டி), தங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அளித்து வருகி"ன்றனர். "ஒரு சதுர அடிக்கு, 280 ரூபாய் வீத ம், கட்டணம் செலுத்தி, ரசீது பெற வேண்டும்; இல்லையெனில், பள்ளியை நடத்த முடியாது' என, நோட்டீசில் தெரிவித்துள்ளதாக, பள்ளி நிர்வாகிகள் கூறுகி"ன்றனர். சதுர அடிக்கு, 280 ரூபாய் எனில், ஒவ்வொரு பள்ளியும், பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டி வரும். இதனால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: இத்தனை ஆண்டுகள் இல்லாமல், தற்போது, திடீரென, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகி"ன்றனர். ஏற்கனவே, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என, உள்ளாட்சி அமைப்புகளிடம், வரி செலுத்தி வருகிறோம். தற்போது, "கூடுதலாக, சதுர அடிக்கு, 280 ரூபாய் வீதம், எங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்; தவறினால், பள்ளியை இடித்து தள்ளுவோம்' என, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஏற்கனவே, பல இன்னல்களுக்கு மத்தியில், பள்ளிகளை நடத்தி வருகிறோம். இந்த பிரச்னையால், பள்ளி நிர்வாகிகள், மிகவும் நொந்து போய் உள்ளனர்.
எல்.பி.ஏ., நிர்ணயித்துள்ள கட்டணத்தை கட்ட வேண்டும் எனில், ஒவ்வொரு பள்ளியும், குறைந்தது, 5 லட்சம் ரூபாய் முதல் கட்ட வேண்டியது வரும். இவ்வளவு பணத்திற்கு, பள்ளி நிர்வாகிகள் எங்கே போவர்? இந்த பிரச்னையில், எத்தகைய முடிவை எடுப்பது என, ஆலோசித்து வருகிறோம். விரைவில், உரிய முடிவை எடுப்போம். இவ்வாறு, நந்தகுமார் தெரிவித்தார்.
திட்ட குழுமமான எல்.பி.ஏ., அதிகாரிகள், நெருக்கடி கொடுத்து வருவதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட கல்வித் துறையிடம் இருந்து, பள்ளிக்கான அங்கீகாரத்தைப் பெறுகின்றனர். பின், கட்டட தரச் சான்றிதழ், தீயணைப்புத் துறையினர் சான்று, உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களையும் பெறுகின்றனர். அத்துடன், உள்ளாட்சி அமைப்புகளிடம், முறையாக வரியும் கட்டுகின்றனர். இந்நிலையில், நகர அமைப்பு துறையின் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் (லோக்கல் பிளானிங் அத்தாரிட்டி), தங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அளித்து வருகி"ன்றனர். "ஒரு சதுர அடிக்கு, 280 ரூபாய் வீத ம், கட்டணம் செலுத்தி, ரசீது பெற வேண்டும்; இல்லையெனில், பள்ளியை நடத்த முடியாது' என, நோட்டீசில் தெரிவித்துள்ளதாக, பள்ளி நிர்வாகிகள் கூறுகி"ன்றனர். சதுர அடிக்கு, 280 ரூபாய் எனில், ஒவ்வொரு பள்ளியும், பல லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டி வரும். இதனால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: இத்தனை ஆண்டுகள் இல்லாமல், தற்போது, திடீரென, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகி"ன்றனர். ஏற்கனவே, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என, உள்ளாட்சி அமைப்புகளிடம், வரி செலுத்தி வருகிறோம். தற்போது, "கூடுதலாக, சதுர அடிக்கு, 280 ரூபாய் வீதம், எங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்; தவறினால், பள்ளியை இடித்து தள்ளுவோம்' என, உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஏற்கனவே, பல இன்னல்களுக்கு மத்தியில், பள்ளிகளை நடத்தி வருகிறோம். இந்த பிரச்னையால், பள்ளி நிர்வாகிகள், மிகவும் நொந்து போய் உள்ளனர்.
எல்.பி.ஏ., நிர்ணயித்துள்ள கட்டணத்தை கட்ட வேண்டும் எனில், ஒவ்வொரு பள்ளியும், குறைந்தது, 5 லட்சம் ரூபாய் முதல் கட்ட வேண்டியது வரும். இவ்வளவு பணத்திற்கு, பள்ளி நிர்வாகிகள் எங்கே போவர்? இந்த பிரச்னையில், எத்தகைய முடிவை எடுப்பது என, ஆலோசித்து வருகிறோம். விரைவில், உரிய முடிவை எடுப்போம். இவ்வாறு, நந்தகுமார் தெரிவித்தார்.
