வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

புதுச்சேரியிலுள்ள பள்ளி வகுப்பறைகளில், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த கல்வித்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது செல்போன்களை
தலைமை ஆசிரியர் அறையில் ஒப்படைக்க வேண்டும்.
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போனை பயன்படுத்தக் கூடாது. வகுப்பறையில் பள்ளி ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவதை சோதனையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைகளில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தியது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...