உயரும் சூரிய வெப்பம் உயிர்கள் அழியும் ஆபத்து

சூரியன் வெப்பம் படிப்படியாக
உயர்ந்து கொண்டிருப்பதால் அடுத்த
2 . 8 பில்லியன் ஆண்டுகளில்
பூமியில்

உயிர்களே இருக்காது என்பது தெரியவந்துள்ளது .
மேலும், சூரியன் வெப்பத்தால் கடல்
நீரையும் வற்றி உயிர்கள்
படிப்படியாக அழிந்துவிடும்
என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூமிக்கு மிக ஆழமான நீர்
ஊற்றுகளில் வாழும் நுண்ணுயிர்கள்
மட்டுமே உயிர் வாழும்
நிலை ஏற்படும்
என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .
இந்த இயற்கை மாறுதல்களால் நீர்
வற்றிவிடும் , கார்பன் டை ஆக்ஸைட்
அளவு குறைந்துவிடும்.
கார்பன் டை ஆக்ஸைட்
அளவு குறைந்துவிட்டால்
அதை சுவாசிக்கும் தாவரங்கள்
அழிந்துவிடும் . தாவரங்கள்
அழிந்துவிட்டால் உயிர்களின்
அழிவும் தொடங்கிவிடும் .

இந்த
மாறுதல்கள் ஏற்படும்
போது பூமியில் இருந்து மனிதன்
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற
கிரகங்களில் குடியேறும்
வாய்ப்பும் உள்ளது . திடீர்
இயற்கை மாறுதல்கள்
அல்லது விண்கற்கள் தாக்குதல்
அல்லது நீண்ட கால
இயற்கை மாறுதல்கள் போன்ற
காரணத்தினாலோ நடக்கலாம் . ஆனால்
கண்டிப்பாக அடுத்த 2 . 8 பில்லியன்
ஆண்டுகளில் பூமியில் உயிர்கள்
இருக்கப்
போவதில்லை என்று ஆய்வு அறிக்கை ஒன்றில்
தெரிந்துள்ளது .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...