1) இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு பற்றி இயக்குனர் அவர்கள் "முதலில் 2013 முன்னுரிமைப் பட்டியல்படியும் அடுத்து 2014
முன்னுரிமைப் பட்டியல்படியும் இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு" நடக்கும். அதற்கு ஏதுவாக தனித்தனியாக முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.
2)இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்க தன்னால் முடிந்த வரை அமைச்சர் மற்றும் கல்வி & நிதி செயாலாளரிடம் கூறுகிறேன் என்று உறுதியளித்தார்.
3)வரும் மே 20 ல் தொடங்கி தொடர்ச்சியாக மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு எந்தவித ஒளிவுமறைவின்றி ஜூன் 10 க்குள் நடத்தி முடிக்கப்படும்.
4)அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாள்காட்டியை நடைமுறைப்படுத்திட ஏதுவாக ஜுன் மாதமே வெளியிட இயக்குனரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
