வோடஃபோன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி இணைந்து, எம்-பேசா என்ற பணப்பரிமாற்ற சேவையை சென்னையி்ல
அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் செல்ஃபோனில் ஒரு கணக்கைத் தொடங்கி அதில் பணத்தை இருப்பு வைத்து அதிலிருந்து பல்வேறு பணப்பரிமாற்றங்களை செய்யலாம் என வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதைக் கொண்டு செல்ஃபோன் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ் மற்றும் மின்சாரம், தொலைபேசி, வீட்டு வரி போன்ற பல சேவைகளுக்கான கட்டணங்களை இருந்த இடத்திலிருந்தே செலுத்தலாம். வங்கிச் சேவை இல்லாத பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இத்திட்டம் மிகவும் ஏற்றது என்றும் இது விரைவான, எளிமையான மற்றும் பாதுகாப்பான பணப்பரிமாற்ற முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது