கால்டாக்சி நிறுவனங்களை சேர்ந்த அனைத்து கார்களிலும், அடுத்த 2 மாதத்துக்குள் ஜிபிஎஸ் கருவி
பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர் அலுவலகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 25 கால்டாக்சி நிறுவனங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் இயங்கி வருகின்றன. குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், தனியார் நிறுவனங்களை சேர்ந்த அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.