உச்சநீதிமன்றம் திடீர் ஆலோசனை அவதூறாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகளின்
அங்கீகாரம் ரத்து?
புதுடெல்லி: அவதூறாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது பற்றி உச்சநீதிமன்றம் ஆலோசித்து வருகிறது. தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு பேச்சு பற்றி வரையறை செய்து விளக்கம் அளிக்குமாறு அரசு சட்ட குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் மத தலைவர்கள் பேசும் சர்ச்சைக்குரிய அவமதிப்பு பேச்சுக்கள் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என இந்த பொதுநல மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.