தலைமையாசிரியைக்கு கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு

பழனி அருகே பள்ளி தலைமையாசிரியையைக்கு கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பழனி டாக்டர் திருமலைநகரை சேர்ந்தவர் ஜோசப் எட்வர்டு ஜான். இவரது மனைவி விக்டோரியா மேரி (42) விக்டோரியா மேரி பழனி அருகே புங்கமுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியையாக வேலை செய்து வருகிறார்.
அதே பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக வேலை செய்பவர் லட்சுமணக்குமார். இவருக்கும், தலைமையாசிரியைக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லட்சுமணக்குமார் தலைமையாசிரியை மேரியை தரக்குறைவாக பேசியதோடு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து தலைமையாசிரியை விக்டோரியாமேரி வெள்ளிக்கிழமை கீரனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து ஆசிரியர் லட்சுமணக்குமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...