தமிழகத்தில் ஏப்ரல், 24ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் அரசு அலுவலர்கள், சிறை ஊழியர்கள்,
போலீசார் என தேர்தல், அரசு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல், சிறைகளில் உள்ள கைதிகள் ஓட்டுப்போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், தண்டணை கைதிகள், விசாரணை கைதிகளுக்கு ஓட்டு போடுவதற்கான அனுமதி வழங்கப்பட வில்லை. அதே நேரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, ஓட்டு போடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது