உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா இன்று பதவியேற்றார்

உச்ச நீதிமன்ற 41-வது தலைமை நீதிபதியாக  ராஜோந்திர மால் லோதா இன்று பதவியேற்றார். அவருக்கு, குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
64 வயதாகும் இவர் செப்டம்பர் 27ம் தேதி வரை இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சட்டம் பயிற்சி பெற்ற நீதிபதி லோதா  1994 ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னாளில் அவர் மாநில நீதி அகாடமி தலைவராக நியமிக்கபட்டார்.
கடந்த 2008ம் ஆண்டில் பாட்னா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். 2008ம் ஆண்டில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...