சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் நீதிபதி எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை
சுப்ரீம் கோர்ட் நியமி்த்துள்ளது. வரும் மே மாதம் 15-ம் தேதி முதல்இக்குழு செயல்பட துவங்கும். இதன் உறுப்பினர்களாக மத்திய தரை வழி போக்குவரத்து துறை முன்னாள் செயலாளர் சுந்தர்,மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மித்தல் உட்பட பலர் பங்கு பெற உள்ளனர்.சாலைபாதுகாப்பு தொடர்பாக மத்திய,மாநில அரசுகள் அமைத்துள்ள குழுக்களின் அறிக்கைகள் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும் என சதாசிவம், ரஞ்சன் கோகோய், ரமணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.