தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 9
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,800 இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன.
இந்த இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் மே 14-ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் ஜூன் 2 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆர்வமுள்ள மாணவர்களை ஈர்ப்பதற்காக விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,800 இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன.
இந்த இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் மே 14-ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் ஜூன் 2 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆர்வமுள்ள மாணவர்களை ஈர்ப்பதற்காக விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.