தமிழகத்தில் துவக்கக் கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, வரும்
கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில் புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. "பாடப்புத்தகங்களில் எப்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலும் விடை எழுதுதல் தொடர்பாக தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், எளிதாக ஆங்கிலம், கணிதம் கற்பித்தல் குறித்து ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித கருவிகள் வழங்கியதும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது" என அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறினார்.