காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் சென்னையில் பேரணி

உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிறைவு செய்யவில்லை எனில், சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் பத்திரிகையாளர்கள்
சந்திப்புக் கூட்டத்தில், அரசு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆசிரியர்களுக்கு, ஏமாற்றத்தை தந்துள்ளது.

கடந்த, 20 ஆண்டுகளாக, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், இதுவரை உடற்கல்வி, ஓவியம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மேற்கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னை கோட்டையில், ஆகஸ்டு, 6ம் தேதி, 4,000 உடற்கல்வி ஆசிரியர்கள் பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...