புத்தகங்கள் பற்றாக்குறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பயிலும் 3,975 மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான இரண்டாம் தொகுதி புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு
வரை முப்பருவ கல்வி முறையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனவே முதல் பருவத்திற்கு ஜூன் மாதம் பள்ளி திறந்த நாளன்றே புத்தகங்கள் வழங்கப்படும். அதில் முதல் பருவத்துக்கான புத்தகங்கள் இரண்டு தொகுதிகளாக உள்ளது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1ம் வகுப்பில் 2,500 புத்தகங்களும், இரண்டாம் வகுப்பில் 550 புத்தகங்களும், ஆறாம் வகுப்பில் 925 புத்தகங்களும் என 3,975 மாணவர்களுக்கு இரண்டாம் தொகுதி புத்தகங்கள் கிடைக்கவில்லை.

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் தொகுதியில் கணிதம் மற்றும் சூழ்நிலையியல் பாடம் உள்ளது. இதேபோல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகள் இரண்டாம் தொகுதியில் உள்ளது. இந்த பாடப்பிரிவுகளை கடந்த 53 நாட்களாக இந்த பாடங்களை படிக்க முடியாமல் போயுள்ளது தெரிய வந்து உள்ளது.

இத்தனை நாட்களாக பாடம் நடத்தப்படாததால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...