அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்


தகுதித்தேர்வு அடிப்படையில் அரசு பள்ளி சிறப்பாசிரியர்களை நியமிக்க கூடாது என்றும், வேலைவாய்ப்பு பதிவு மூப்புப்படியே நியமிக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிறப்பாசிரியர் நியமனம்


அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்; வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை ஏழை, கிராமப்புற பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும்.

தமிழக அரசின் இந்த புதிய நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வின் மூலம் நியமிப்பதே தவறானது என்ற கருத்து கல்வியாளர்கள் மற்றும் சமூக நீதியாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சிறப்பாசிரியர்களையும் தகுதித்தேர்வின் மூலம் நியமிக்க துடிப்பது சரியானதல்ல.

கண்டனம்

இதன்மூலம் சிறப்பாசிரியர்களுக்கான கல்வித்தகுதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நீண்டகாலமாக வேலைக்காக காத்திருப்பவர்களும், தமிழக அரசால் கடந்த 2012-ம் ஆண்டில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானோரும் 40 வயதைக் கடந்தவர்கள் ஆவர். இவர்களாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களாலும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது கடினமானதாகும்.

அதுமட்டுமின்றி, ஆசிரியர் பணியில் இருந்து சிறப்பாசிரியர் பணி பல வழிகளில் மாறுபட்டதாகும். ஆசிரியர் பணி என்பது ஏட்டுக் கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பதாகும். ஆனால், சிறப்பாசிரியர் பணி என்பது கலையை பயிற்றுவிப்பதாகும். இப்பணிக்கு கலை அறிவும், கற்பிக்கும் திறனும் தான் மிகவும் முக்கியமானது ஆகும். இவற்றைத் தகுதித்தேர்வின் மூலம் அளவிட முடியாது என்பதைக்கூட உணராமல் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அரசு அறிவிக்க வேண்டும்

இசை, ஓவியம், தையல் போன்ற கலைப்படிப்புகளை படித்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சிறப்பாசிரியர் நியமனத்திற்கான தகுதித்தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்.

அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் 16 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணிநிலைப்பு வழங்குவதுடன், இனி வரும் காலங்களிலும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில்தான் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அரசு அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...