அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின !!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, மாநிலம் முழுவதும், 1.5 லட்சம் ஊழியர்கள் திடீர் விடுப்பு போராட்டம் நடத்தியதால், அரசு அலுவலகங்கள் முடங்கின. இதனால், அரசு பணிகள் ஸ்தம்பித்தன. விவரம் தெரியாமல் அரசு
அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட்டு, மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலி பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கம் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தை அறிவித்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...