தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, எஸ்.ஐ., பதவி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு தடையின்மை சான்றை, தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் வாயிலாக, எஸ்.ஐ., பதவி
தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஐந்து ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு, தடையின்மை சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு, வரும் 23ம் தேதிக்குள், தடையின்மை சான்று வழங்க வேண்டும் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வாக்கி - டாக்கி மூலமும், காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் வாயிலாக, எஸ்.ஐ., பதவி
தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஐந்து ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு, தடையின்மை சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு, வரும் 23ம் தேதிக்குள், தடையின்மை சான்று வழங்க வேண்டும் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வாக்கி - டாக்கி மூலமும், காவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.