விடுப்பில் வெளிநாடு சென்ற ஆசிரியைக்கு சம்பளம் : ஐகோர்ட் உத்தரவு

விடுப்பில் வௌிநாடு சென்ற பரமக்குடி ஆசிரியைக்கு சம்பளம் தர மறுத்த கல்வித்துறை அதிகாரியின் உத்தரவை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. பரமக்குடியில் அரசு உதவி பெறும் பாரதியார் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை விஜயலட்சுமி. இவரது மகள் அமெரிக்காவில் உள்ளார். அவர் கர்ப்பிணியாக இருந்தபோது உதவி செய்ய ௨௦௧௪ ஜூன் ௧ முதல் செப்.,௧௫ வரை பள்ளிக் குழு அனுமதியுடன் விஜயலட்சுமி விடுப்பில் அமெரிக்கா சென்றார். இதற்கு துவக்கக் கல்வி இயக்குனரின் அனுமதி பெறவில்லை
எனக்கூறி விஜயலட்சுமி விடுப்பில் சென்ற காலத்திற்குரிய சம்பளம் வழங்க பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர் மறுத்தார். இதை எதிர்த்து விஜயலட்சுமி ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.நீதிபதி டி.ராஜா,''விதிகள்படி மனுதாரர் துவக்கக் கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. மனுதாரர் பள்ளிக் குழு அனுமதியுடன் வௌிநாடு சென்றுள்ளார். சம்பளம் அனுமதிக்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார். மனுதாரர் வக்கீல் ஈ.வி.என்.சிவா ஆஜரானார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...