டான்செட் நுழைவுத்தேர்வு

       முதுநிலைப் பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

       மே 16, 17 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் பதிவு செய்ய முடியும்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மே 16-ஆம் தேதியும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு மே 17- ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம்.

பதிவு செய்ய ஏப்ரல் 20 ஆம் தேதி கடைசி நாள். சென்னை மையத்தில் நேரடியாகப் பதிவு செய்ய ஏப்ரல் 22 கடைசித் தேதியாகும்.

இதுகுறித்த விவரங்களை www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...