மின்னல் வேகத்தில் செயல்படும்TRB - சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி பிப்.16 முதல் துவங்கும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி பிப்.16 முதல் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 1807 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 10ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 2,02,231 நபர்கள் விண்ணபித்திருந்தனர். அதில் 1,90,922 நபர்கள் எழுத்துத் தேர்வு எழுதினர். இதையடுத்து 22.01.2015 அன்று அனைத்து பாடங்களுக்கு விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, ஆட்சேபனை இருந்தால் 29.01.2015க்குள்
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட கேட்டுக் கொள்ளப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்த ஆசிரியர் தேர்வு வாரியம் தக்க நடவடிக்கை மேற்கொண்டது. அதன் விளைவாக இன்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...