அரசு ஊழியர்களைப்போல் மருத்துவ காப்பீடு திட்டம் கூட்டுறவு பணியாள்களுக்கும் நீட்டிப்பு!

அரசு ஊழியர்களைப்போல் கூட்டுறவு சங்க பணியாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு புதிய மருத்துவ காப்பீட்டு விரிவாக்க திட்டத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விரிவாக்க திட்டம் தொடக்கம்
கூட்டுறவு சங்க சட்டவிதிகளுக்கு உட்பட்டு பணியமர்த்தம் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 245 கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பொது விநியோக திட்ட விற்பனையாளர், கட்டுனர் உள்ளிட்ட 41 ஆயிரத்து 61 சங்க பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 986 நபர்களைச் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 47 பேர் பயன்பெறும் வகையில் கூட்டுறவு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு விரிவாக்க திட்டத்தை தொடக்கி வைப்பதன் அடையாளமாக, மூன்று கூட்டுறவு பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளை தலைமைச் செயலகத்தில் 27-ந் தேதி (நேற்று) முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...