1042 பட்டதாரி ஆசிரியர்கள் ,முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்!!!

தமிழகம் முழுவதும் 1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரிஆசிரியர்களாக பதவி உயர்வு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான
இடமாறுதல்- பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் -பதவி உயர்வுக் கலந்தாய்வு, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் - பதவி உயர்வு கலந்தாய்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை நிறைவு பெற்றுள்ளன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம்விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 542 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...