ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை எழுதுவதற்கு பள்ளிவாசல் வளாகத்தில் இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை www.akias.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி'யின் தலைவர் மௌலானா ஷம்சுதீன் காஸிமி கூறியது:
இந்திய இஸ்லாமிய எழுத்தறிவு இயக்கம் (இல்மி) நடத்தும் "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி' சார்பில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து வருகிறது.
15 மாணவிகள், 60 மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், புத்தகங்கள், தரமான பயிற்சி உள்பட அனைத்தும் எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த மையத்தில் பயின்ற முதல் குழுவிலேயே ஒரு மாணவர் யுபிஎஸ்சி தேர்விலும், 25 மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி போன்ற மத்திய, மாநில அரசு பணித் தேர்வுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த அமைப்பு தன்னுடைய பணியை விரிவுபடுத்தும் வகையில், இந்த ஆண்டு முதல் சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து மதங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்களுக்கு போட்டித் தேர்வுப் பயிற்சிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
இதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை www.akias.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி'யின் தலைவர் மௌலானா ஷம்சுதீன் காஸிமி கூறியது:
இந்திய இஸ்லாமிய எழுத்தறிவு இயக்கம் (இல்மி) நடத்தும் "அழகிய கடன் ஐஏஎஸ் அகாதெமி' சார்பில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளித்து வருகிறது.
15 மாணவிகள், 60 மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், புத்தகங்கள், தரமான பயிற்சி உள்பட அனைத்தும் எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த மையத்தில் பயின்ற முதல் குழுவிலேயே ஒரு மாணவர் யுபிஎஸ்சி தேர்விலும், 25 மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி போன்ற மத்திய, மாநில அரசு பணித் தேர்வுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த அமைப்பு தன்னுடைய பணியை விரிவுபடுத்தும் வகையில், இந்த ஆண்டு முதல் சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமன்றி அனைத்து மதங்களையும் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, ஏழை மாணவர்களுக்கு போட்டித் தேர்வுப் பயிற்சிகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
இதற்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக பதிவு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.