சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக கே.பி.கே.வாசுகி, கடந்த 2010–ம் ஆண்டு பதவி ஏற்றார். பின்னர், அவர் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிபதி கே.பி.கே.வாசுகி, இன்று (செவ்வாய்க்கிழமை)
ஓய்வுப்பெறுகிறார். இவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது.
ஐகோர்ட்டில் மொத்தம் 60 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 38 நீதிபதிகள் உள்ளனர். 22 பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது நீதிபதி வாசுகி ஓய்வுப்பெறுவதை தொடர்ந்து, காலிப்பணியிடங்கள் 23 ஆக உயர்ந்துள்ளது
ஓய்வுப்பெறுகிறார். இவருக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது.
ஐகோர்ட்டில் மொத்தம் 60 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 38 நீதிபதிகள் உள்ளனர். 22 பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது நீதிபதி வாசுகி ஓய்வுப்பெறுவதை தொடர்ந்து, காலிப்பணியிடங்கள் 23 ஆக உயர்ந்துள்ளது