SSTA மாநில செயற்குழு கூட்டம்! ( கூட்டத்தின் முடிவு- இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என்ற ஓரே கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் கடுமையான போராட்டம்)

SSTA மாநில செயற்குழு கூட்டம் ஈரோடு  VPA மஹாலில் இன்று 13.09.2015 சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு மாவட்ட செயலாளர் மாரிதுரை வரவேற்று பேசினார். ஈரோடு மாவட்ட தலைவர் முனியப்பன் முன்னிலை வகிக்க மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்த குமார்
தலைமை தாங்கினார். சத்தியமங்கல வட்டார பொருளாளர் அசோக்குமார் தொகுத்து வழங்கினார்.  மாநிலபொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் ஞானசேகரன் மாநில துணைச்செயலாளர் வேல்முருகன் மற்றும் மாநில கொள்கைபரப்பு செயலாளர் செபாஸ்டின் ராபர்ட் சிறப்புரை ஆற்றினார்கள். இடைநிலை ஆசிரியர்கள்  ஊதிய முரண்பாடுகள் களைய நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு பற்றிய தகவல்களை மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் சிறப்பாக எடுத்துக் கூறினார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கல வட்டார செயலாளர்  கணபதி சோதரன் , செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் , பவானி சாகர் வட்டார பொறுப்பாளர் கசமுத்து,   சேலம் மாவட்ட செயலாளர் தமிழ்த் தென்றல், தலைவர் ராஜேந்தி்ரன், நாமக்கல் மாவட்ட மகளிரணி செயலாளர் மகேஸ்வரி, தருமபுரி  மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் , போன்றவர்கள் சிறப்பாக பேசினார்கள். இறுதியில்
ஈரோடு மாவட்ட பொருளாளர் கார்த்திக் நன்றி கூற அறுசுவை உணவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...