பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது, ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, துறை அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அதன் விவரம்:
* பொது மக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றதற்கான ஒப்புகையை, மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும்
* ஒப்புகை அளித்த ஒரு மாதத்துக்குள், மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை, மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்
* நடவடிக்கை எடுக்க, கூடுதல் அவகாசம் தேவை என்றால், அதற்கான காரணத்தை, எழுத்து மூலம் மனுதாரருக்கு, அதிகாரிகள் கூற வேண்டும். இதேபோல், மனுவை தள்ளுபடி செய்தற்கான காரணத்தையும், ஒரு மாதத்துக்குள் சொல்ல வேண்டும்
* இந்த ஆணையை, அனைத்து அதிகாரிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும். மூத்த அதிகாரிகள், தன் சக ஊழியர்களிடம், இந்த ஆணை குறித்து தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு ஆணையில் கூறப்பட்டு உள்ளது.
இது வரவேற்கத்தக்கது; கால தாமதம் தவிர்க்கப்படும். பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.
சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் -
அதன் விவரம்:
* பொது மக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்றதற்கான ஒப்புகையை, மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும்
* ஒப்புகை அளித்த ஒரு மாதத்துக்குள், மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை, மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்
* நடவடிக்கை எடுக்க, கூடுதல் அவகாசம் தேவை என்றால், அதற்கான காரணத்தை, எழுத்து மூலம் மனுதாரருக்கு, அதிகாரிகள் கூற வேண்டும். இதேபோல், மனுவை தள்ளுபடி செய்தற்கான காரணத்தையும், ஒரு மாதத்துக்குள் சொல்ல வேண்டும்
* இந்த ஆணையை, அனைத்து அதிகாரிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும். மூத்த அதிகாரிகள், தன் சக ஊழியர்களிடம், இந்த ஆணை குறித்து தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு ஆணையில் கூறப்பட்டு உள்ளது.
இது வரவேற்கத்தக்கது; கால தாமதம் தவிர்க்கப்படும். பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்.
சடகோபன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தலைவர் -