155 பள்ளி செல்லாத குழந்தைகள்!

முதல்கட்ட கணக்கெடுப்பில், 70 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 155 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
எஸ்.எஸ்.ஏ., சார்பில், ஆண்டுதோறும் ஏப்., மே மாதங்களில், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
நடத்தப்படும். இதில் கண்டறியப்படும் குழந்தைகள், உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். பின், ரெகுலர் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.


திருப்பூரில், எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மைய ஊழியர்களை கொண்ட குழுக்கள், பகுதி வாரியாக தினமும் வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, கணக்கெடுத்தனர். ஆறு முதல், 14 வயதுக்கு உட்பட்டவர்கள், பிறந்த குழந்தை முதல், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் விசாரிக்கப்படுகின்றனர்.

வரும், 30 வரை முதல்கட்டமாகவும்; மே, 17 முதல், 24 வரை இரண்டாம் கட்டமாகவும், கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுவரை, 70 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 155 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக, எஸ்.எஸ்.ஏ., அலுவலர்கள் தெரிவித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...