SSA-SPD பூஜா குல்கர்னி மாற்றம், தேர்தல் கமிஷன் அதிரடி !

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16ம் தேதி நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்ட கலெக்டராக காக்கர்லா உஷா, திருவாரூர் மாவட்ட கலெக்டராக வெங்கடேஷ், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக

பூஜா குல்கர்னி, நெல்லை மாவட்ட கலெக்டராக சத்தியமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக சுதாகர், ஈரோடு மாவட்ட எஸ்.பி.,யாக ரூபேஷ்குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கான டிஜிபி.,யாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஏடிஜிபி ஆக சத்தியமூர்த்திக்கு பதிலாக கரண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...