ஓட்டுச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்? : மாநில தேர்தல் கமிஷன் புது உத்தரவு !

உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்காளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய,
ஓட்டுச்சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்

களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

l மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்கள், அரசு பள்ளி கட்டடங்கள், அரசு உதவிபெறும் மற்றும் பிற பள்ளி கட்டடங்கள், அரசு கட்டடங்களில், ஓட்டுச்சாவடிகளை அமைக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், ஓட்டுச்சாவடியாக பயன்படுத்திய கட்டடங்களுக்கு

முன்னுரிமை தர வேண்டும்

l மிக பழமையான கட்டடங்களாக அல்லாமல், இயற்கை சேதங்களை தாங்க கூடியதாகவும்,

பாதுகாப்பாக தேர்தலை நடத்த ஏதுவானதாகவும் இருக்க வேண்டும்

l காவல் நிலையம், ஊராட்சி அலுவலகம், விருந்தினர்

விடுதி, வழிபாட்டு தலங்கள், சத்துணவுக்கூடம், மருந்தகம் மற்றும் சத்திரங்கள் போன்ற இடங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கக்கூடாது

l கிராமப்புறங்களில், 1,000 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி; நகர்ப்புறங்களில், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி; மாநகராட்சிகளில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடியும் அமைக்க வேண்டும்

l அக்., மாதம் மழைக்காலம் என்பதால், ஓட்டுப்பதிவு மையத்தின் கூரைகள், ஒழுகாமல் பழுது நீக்க வேண்டும். மின்கசிவு ஏற்படாத வகையிலும், மழைநீர் தேங்கி அடைப்பு ஏற்படாத வகையிலும் பராமரிக்க வேண்டும்

l மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் ஓட்டளிக்க ஏதுவாக, ஓட்டுப்பதிவு மையங்களில் சரிவுப்பாதைகள் அமைத்து, வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.



பெண்களுக்கான வார்டு: ஒரு வாரம் 'கெடு' : -தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட, 1.50 லட்சம் பதவிகள் உள்ளன.

இந்த உள்ளாட்சி பதவிகளில், பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கி, அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதமாக நடக்கும் இப்பணிகள், இன்னும் நிறைவு பெறவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு கால அவகாசம் குறைவாக உள்ள நிலையில், இதனால், மாநில தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே, பெண்களுக்கான வார்டுகள் பிரிக்கும் பணியை, ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...